
வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் பழைய முகங்களை அகற்றி இளைஞர்களுக்குப் போட்டியிட அம்னோ வாய்ப்பு வழங்க வேண்டுமென ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் வலியுறுத்தியுள்ளார்.
வரும் பொதுத்தேர்தலில் புதிய வாக்காளர்களாக 40 லட்சம் இளைஞர்கள் வாக்களிக்க இருப்பதால், இளைஞர்களுக்கு இடம் கொடுத்தால் அம்னோ அமோக வெற்றியடையும் என்று குறிப்பிட்டார்.
30, 40 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருப்பதை விடுத்து, புதிய முகங்களை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அம்னோ தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டால், பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை உறுதியாக எதிர்கொள்ள முடியும் என்றும் நூர் ஜஸ்லான் குறிப்பிட்டார்.
