
ஜூன் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாட்டின் பொது முடக்கம் அமலுக்கு வரும் இந்த காலகட்டத்தில் கள்ளக் குடியேறிகளளுக்கு எதிராக குடிநுழைவுத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹச்மா ஜைனுடின் தெரிவித்தார்
.
கைது செய்யப்படும் கள்ளக் குடியேறிகளை தடுத்து வைப்பதற்கு கூடுதல் தடுப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய பதிவு இலாகா மற்றும் போலீஸாருடன் இணைந்து குடிநுழைவுத்துறை இந்த மாபெரும் கைது நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
இதனிடையே நாளை முதல் 55 ,000 போலீஸ் அதிகாரிகள் 800 சாலை தடுப்பு சோதனைகளில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.
