
காவலில் மரணமடையும் கைதிகள் மரணம் தொடர்பில் முழ விசாரணை நடத்தி தண்டனை வழங்க IPCMC மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்று துணை முதல்வர் ராமசாமி தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கும் தடுப்புக் காவல் மரண சம்பவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் EAIC தோல்விகண்டு இருப்பதாக அவர் சொன்னார்.

இந்த மரண சம்பங்களை விசாரிக்க ஐபிசிஎம்சி போன்ற விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
அப்போதுதான் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.
கடந்த ஒரு மாதத்தில் கணபதி, சிவபாலன், சுரேந்திரன் ஆகிய மூன்று இந்தியர்கள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.
