
தேவையான அளவு அத்தியாவசிய உணவுப் பொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என் று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கேட்டுக் கொண்டார்.
கடந்த முறை அமல் படுத்தப்பட்ட முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது உணவு பொருள் விநியோகம் துண்டிக்கப்படும் நிலை உண்டாகவில்லை.
ஆகவே, இம்முறை அமல்படுத்தப்படும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது போதுமான அளவு அத்தியாவசிய உணவுப் பொருள் கையிருப்பு இருக்கும் என்று அவர் கூறினார்.
பதற்றத்தில் அதிக அளவில் பொருள்களை வாங்கி குவிக்க வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்
