
சிறுபான்மை சமயங்களுக்கு எதிரான போக்கு இங்கு அதிகமாக நிலவி வருவதால், அதிகமான தொழில் ரீதியான நிபுணர்கள் வெளிநாடுகளில் குடியேறுவதாக அரசு சாரா குளோபல் மனித உரிமை பெடரேஷன் குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாத்தை இழிவுபடுத்துவோர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கும் வேளையில் மற்ற சமயங்களை இழிவுபடுத்துவோர் மீது அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக அந்த அரசு சாரா இயக்கத்தைச் சேர்ந்த சரவாக்கின் பீட்டர் ஜோன் ஜாபான் தெரிவித்தார்.
தனிப்பட்ட நபர்களே அது சம்பந்தமான நடவடிக்கை எடுத்து தங்களின் பணத்தைச் செலவிட வேண்டுமென அரசு விரும்புகிறது.
இம்மாதிரியான பாகுபாடான போக்கை வெறுத்தே தொழில் சார்ந்த நிபுணர்கள் வெளி நாடுகளில் குடியேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.



