பண்டார் பெர்மைசுரி, கம்போங் கோங் பத்துவில் கனராக லோரியோடு காரொன்று மோதி தீப்பிடித்ததில், காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பரிதாபமாகக் கருகி மாண்டார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.35 மணியளவில் 5 டன் லோரி சமிக்ஞை கோல திரேங்கானுவிலிருந்து பெசுட் கம்போங் ராஜாவுக்கு வலது பக்கம் திரும்ப எத்தனித்தபோது, பின்னால் அதி வேகமாக வந்த பெரோடுவா கெலிசா கார், அதனை முந்திச் செல்ல முயன்று, லோரியோடு மோதியது.
அதில் தீப்பற்றிய இரு வாகங்களின் பயணிகள் உயிர் தப்பிய வேளையில், காரில் இருந்த அந்தப் பெண்ணை மீட்க முடியாமல் போனதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.