
பொருள் விற்பனைக் கூடங்களில் விலையேற்றத்தைக் கண்காணிக்க உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் அமைச்சு மாறுவேடத்தில் அதிகாரிகளை பணிக்கு அமர்த்தும் என்று துணையமமைச்சர் Rosol Wahid (ரோசோல் வாஹிட்) தெரிவித்தார்.
தற்போது, கோழியின் விலை இறக்கம் கண்டாலும் பல பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் இந்த அணுகுமுறை அனுசரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அரசு அமல்படுத்தியிருக்கும் உதவிநிதி, உச்சவிலை வரம்பு, மலேசிய குடும்ப விலைக் குறைப்பு சந்தை ஆகியவை மக்களுக்குப் பயனளித்து வருவதாக ரோசோல் தெரிவித்தார்.



