
கிள்ளான் Taman Sri Gadong (தாமான்ஸ்ரீ காடோங்) கில் 41 வயதான கிரிமினல் குற்றவாளி 3 நபர்களால் சுடப்பட்டு, பின்னர் பாராங் கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
சிசிடிவி பதிவின்படி அந்த மூவரும் சாலையின் அருகே சம்பந்தப்பட்ட நபரை மடக்கியதோடு, காரில் இருந்து இறங்கி அந்த நபரை 5லிருந்து 8 முறை சுட்ட பின்னர், பாராங் கத்தியால் வெட்டிய பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
பின்னிரவு 12.22 மணிக்குத் தகவல் கிடைத்து அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபருக்கு ஏற்கெனவே 10 கிரிமினல் குற்றங்கள் இருந்ததாகவும் அதில் ஆள் கடத்தல் நடவடிக்கையும் உண்டு என தெரிய வந்துள்ளது.



