
ஜூன் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மலேசிய ஒட்டப் பந்தய மற்றும் கோத்தா கினாபாலு காயா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இணந்து உலக தடகள பயிற்றுனர் பயிற்சி இயங்கலை மூலமாக நடத்தப்படும்.
உலகலாவிய நிலையில் இயங்கலை வாயிலாக நடத்தப்படும் இந்த அனைத்துலக தடகள பயிற்றுநர் பயிற்சியை ஏற்று நடத்தும் நாடுகளின் வரிசையில் மலேசியா மூன்றாவது நாடாக திகழ்கிறது.
உலக தடகள பயிற்றுநர் பயிற்சியை நம் நாட்டின் தடகள பயிற்சி இயக்குனர் மற்றும் உலக தடகள மூத்த விரிவுரையாளர் அன்பரசு சுப்பிரமணியத்தை மலேசிய ஓட்டப்பந்தயச் நியமித்துள்ளது.
இந்த பயிற்றுநர் பயிற்சியை மேலும் சிறப்பாக வழிநடத்த சா அலாம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஜீவநாதன் புண்ணியமூர்த்தி பயிற்சி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
ஜூன் 13ஆம் தேதி மலேசிய ஓட்டப்பந்தயச் சங்கத் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து இந்த பயிற்சியை முடித்து வைப்பார்.
