
மலேசிய நாட்டில் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட முதல் மலாய்க்காரர் அல்லாத டான்ஸ்ரீ தோமி தோமஸ், எதிர்காலத்தில் இதுபோன்ற நியமனங்களை மலேசியா எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதை நடைமுறைபடுத்துவது அரசியல் தலைவர்களைப் பொறுத்தது என்றார்.
“உங்கள் கேள்விக்குப் பதில், ‘நான் சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான தலைவரைத் தேர்வு செய்ய விரும்புகிறேன், எனது அமைச்சரவையில் 10 சீனர்கள், ஐந்து இந்தியர்கள், மற்றும் சபா சரவாக்கைச் சேர்ந்த ஐவர் இருப்பார்கள்’’ என்று, இன்று ஒரு பிரதமர் சொல்ல முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
“எதுவும் மாறாது. சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கும், பறவைகள் தொடர்ந்து கூச்சலிடும், மலேசியா ஒரு நிலையான நாடு.
“இது உண்மையில் தலைவர்களைப் பொறுத்தது, அரசியல் தலைவர்கள் வழிநடத்த வேண்டியது,” என்று அவர் கூறினார்.
