
எதிர்வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் பெஜுவாங் பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கும் சாத்தியம் இருப்பதாகத் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எந்தவொரு கட்சியும் தனித்து நின்று வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்க முடியாது என்று கூறிய அவர், கால சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிகள் வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
வயது தளர்ந்த காலத்தில் தாம் தேர்தலில் போட்டியிட்டு, மூன்றாவது முறையாகப் பிரதமராகும் எண்ணமில்லை. எனினும், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டியிடவும் கூடும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.



