
நஜிப் ரசாக்கின் வழக்கில் தலையிடும்படி அம்னோ தலைவர்கள் தமக்கு நெருக்குதல் தரவில்லை என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
3 நாளகளுக்கு முன்னர் அம்னோவின் அவசரக் கூட்டத்தில் அந்த நெருக்குதல் தரப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் அந்தச் சிறப்புக் கூட்டத்தில் வரும் பொதுத்தேர்தல் பற்றி மட்டுமே பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுமையும் 159 அம்னோ தொகுதித் தலைவர்கள் அதில் கலந்து கொண்டபோது, அதில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



