
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகள் கூட்டணி சின்னத்தில் போட்டியிடும் என அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது பக்காத்தான் மீது சுமத்தப்படும் எதிர்மறையான விமர்சனத்தைத் தவிர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜொகூர் தேர்தலில் பிகேஆர் அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட்ட வேளையில், ஜசெகவும் அமானாவும் பக்காத்தான் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவின.
தனித் தனி சின்னங்களில் போட்டியிட்டால் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்ற அவப்பெயரும் நம்பிக்கையும் குறையும் என்பதால், குழப்பத்தைத் தவிர்க்க பக்காத்தான் சின்னத்தில் போட்டியிடுவதே சிறப்பு என்று அன்வார் குறிப்பிட்டார்.



