
எஸ்ஆர்சி நிதி முறைகேட்டில் இப்போது சிறைவாசத்தை அனுபவித்து வரும் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். அவருக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று நேற்று முன்தினம் நஜிப்பின் ஆதரவாளர்கள் அரண்மனையில் மகஜர் ஒன்றை சமர்பித்துள்ளனர். நஜிப் நாட்டில் உள்ள எல்லா ஆட்சியாளர்களும் நெருக்கமாக உள்ள நிலையில், அவருக்கு உயர்நீதிமன்றம் தண்டனை அளித்திருந்தபோதும், பேரரசர் அவரை நோன்புப் பெருநாளுக்கு அழைத்து சிறப்புச் செய்ததன் மூலம், அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம் என்றும் மகாதீர் சுட்டிக்காட்டினார்.



