
தாங்கள் முன்வைத்த 4 அம்சங்களைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி ஏற்றுக் கொள்ளாவிட்டால், துணைப் பிரதமர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவார் என்று சில அம்னோ தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள விவரம் கசிந்துள்ளது.
சட்டத் துறைத் தலைவர் இட்ரிஸ் ஹருண், தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் ஆகியோரை நீக்கவும், நஜிப் ரசாக்கிற்கு அரசு மன்னிப்பைக் கோரவும், பொதுத்தேர்தலை அறிவிக்கும்படியும் இஸ்மாயிலுக்கு நெருக்குதல் தரப்பட்டதாகத் தெரிகிறது. புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் அரசியல் நிர்வாகக் கூட்டத்தில், அந்த நிபந்தனைகள் முன் வைக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் அம்னோவின் முக்கிய தலைவர்கள் அதனை மறுத்துள்ளனர்.



