
15ஆவது பொதுத்தேர்தலில் வாரிசான் தனித்தே போட்டியிடும் என்று அதன் தலைவர் Shabi Abdal (ஷாபி அப்டால்) தெரிவித்தார்.
தமது கட்சி சபாவில் 25 நாடாளுமன்றத் தொகுதிகள், லாபுவானில் ஒரு தொகுதி, தீபகற்ப மலேசியாவில் சில தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அதற்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
அதே போன்று, சட்டமன்றத் தொகுதிகளிலும் வாரிசான் தனித்தே போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், ஷாபி அப்டால் நாட்டின் பிரதமராக ஆவதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய துன் மகாதீர், இப்போது என்ன செய்யப் போகிறார் என்பது கேள்விக் குறியாக உள்ளது.



