
பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான Quepecs (கியூபெக்ஸ்) சம்பளம், அலவன்ஸுக்கான பரிந்துரையைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் சமர்ப்பித்து விட்டதாக அதன் தலைவர் Adnan Mad (அட்னான் மாட்) தெரிவித்தார்.
தற்போதைய வாழ்க்கைச் சுமையைச் சமாளிக்க அந்தப் பரிந்துரையில் புதிய சம்பள விகிதம், கூடுதல் அலவன்ஸைக் கோரி மனு செய்யப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டிற்குப் பின்னர், புதிய சம்பளத் திட்டம் எதுவும் அறிவிக்காமல் இருப்பதால், ஆகஸ்டு 30ஆம் தேதி நல்ல செய்தி வரும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய தினத்தின் முதல் நாள் நல்ல செய்தியை அறிவிக்கப் போவதாக ஆகஸ்டு 21ஆம் தேதி பிரதமர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



