
மற்ற கட்சிகளை விட பிகேஆரில் தெளிவான நோக்கமும் கட்சி அமைப்பும் சிறப்பாக இருப்பதாக அதன் தலைவர் Anwar Ibrahim அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கட்சியை அனுபவமிக்க மூத்தோரும் துடிப்புமிக்க இளையோரும் வழிநடத்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிகேஆரில் மட்டுமே இரு தலைமுறைக்கான தலைவர்கள் இருப்பதாகவும் தமக்குப் பிறகு கட்சியை வழிநடத்த தகுதியான, திறமையான இளம் தலைவர்கள் நூற்றுக் கணக்கில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
75 வயதான அன்வார், கட்சியின் பேராளார் மாநாட்டில் பேசும்போது, நாட்டை ஊழல்வாதிகள் ஆளக்கூடாது என்றும் பல்லினங்களையும் அரவணைத்துச் செல்வதில் பிகேஆர் முன்னிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.



