
நஜிப் ரசாக்கை தற்காக்கத் தவறியும் பொதுத்தேர்தலை நடத்த மெத்தனம் காட்டும் அம்னோவின் உதவித் தலைவர் பதவியிலிருந்து இஸ்மாயில் சப்ரியை விலக்க நினைப்பது அறிவீனம் என Nusantara (நுசந்தாரா) ஆய்வுக் கழகத்தின் Azmi Hasan (அஸ்மி ஹசான்) சாடியுள்ளார்.
அவரை நீக்குவதற்குத் தகுந்த காராணம் எதுவுமில்லை. நஜிப்பிற்கு அவர் உதவவில்லை என்று கூறுவதும் அபத்தம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே தாஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் சின் கூறும்போது, அவரைப் பதவியிலிருந்து நீக்கினாலும் அவர் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிக்க முடியும் என்றார்.
மேலும், அமைச்சர்கள் பதவி விலக மாட்டார்கள். தேர்தல் நடக்கும் சமயத்தில் அம்னோ ஆட்சியில் இருக்கவே விரும்பும். சட்டத்துறைத் தலைவர், தலைமை நீதிபதியை விலக்கவும், நஜிப்பிற்கு அரச மன்னிப்பைக் கோரவும் இஸ்மாயில் முன்னெடுக்க வேண்டுவது கூடியபட்ச மானதாகும்.
மேலும், பொதுத் தேர்தலை விரைவாக நடத்தக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறுவதால், இஸ்மாயில் சப்ரிக்கு அவை ஆதரவு வழங்க முன்வரும் என்றும் அவர் தெரிவித்தார்.



