
முஹிடின் யாசினுக்கு மலாய்க்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற அதிகார வெறியே முக்கியம் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.
அவர் சார்ந்த பெரிக்காத்தான் நேஷனல் நாட்டுக்காக உழைக்கும் கட்சி இல்லையென்றும் பிரதமர் பதவியை அடைய வேண்டுமென்பதே அதற்கு முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை முஹிடின் யாசின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து தேசிய முன்னணியை எதிர்க்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்ததை அடுத்து, மகாதீர், பல பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் பெரிக்காத்தானை நம்ப முடியாது என்றும் 2020இல் அது பக்காத்தான் அரசாங்கத்தைக் கவிழ்த்ததாக அவர் குற்றம் சாட்டினார்.



