
எல்சிஎஸ் என்று சொல்லப்படும் போர்க் கப்பல் குத்தகை நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டான்ஸ்ரீ Lodin Wok Kamarudin (லோடின் வொக் கமாருடின்) யாரின் கண்ணுக்கும் தெரியாமல் தப்பித்துள்ளது பெரும் வியப்பாக இருப்பதாக சி4 எனும் ஊழலையும், அணுக்கமானவர்களுக்குச் சலுகை காட்டுவதையும் எதிர்க்கும் இயக்கத்தின் தலைவர் Cynthia Gabriel (சிந்தியா கேப்ரியல்) கேள்வி எழுப்பினார்.
போர்க் கப்பல் குத்தகையைப் பெற்ற Bousted Industries போஸ்டெட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர் நேரடியாகவே ஈடுபட்டுள்ளவர் என்பதால் அந்த நிறுவனத்தில் நடந்த உழல் நடவைக்கையினால், 6 கப்பல்களில் ஒரு கப்பல் கூட கட்டி முடிக்காமல் இருப்பதற்கான விளக்கத்தைச் சொல்லாமல் வாய் மூடி இருப்பது ஏன் என்று சிந்தியா கேள்வியைத் தொடுத்தார்.
லோடின் வோக் இதற்கு முன்னர் அரசின் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்திலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நஜிப் ரசாக்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் பல அரசு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



