
நாட்டில் அகதிகளாக தங்கியிருக்கும் 47,200 குழந்தைகள் கல்வி, சுகாதார வசதியில்லாமல் அவதிப்படுவதாக ஐடியஸ் (IDEAS) எனும் அரசு சாரா இயக்கம் சுட்டிக்கட்டியுள்ளது.
Unicef Malaysia’s (மலேசியா யூனிசெஃப்) தலைவர் (சஸ்கியா புளூம்) Saskia Blume கூறும்போது, அகதிகளாக வந்திருக்கும் இம்மாதிரியான மக்களின் பிள்ளைகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பது நாட்டின் கடமையாகும் என்று குறிப்பிட்டார்.
ஐடியஸின் தலைமைச் செயல்முறை அதிகாரியான Tricia Yeo (டிரிஸியா யியோ) இது தொடர்ச்சியான பிரச்சினையாக இருக்கும் என்று கருதப்படுவக்தால், நாட்டின் கொள்கை வகுப்பில் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரச் சேவைகளை இணைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
