
2020ஆம் ஆண்டு நாட்டில் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 631ஆக இருந்த வேளையில், அது 2021இல் 1,242ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தற்கொலை முயற்சியை ஒரு குற்றமாகக் கருதி அதற்கு ஓராண்டு சிறையும் அபராதமும் விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சமூக அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.
அம்மாதிரியான தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான சட்டத்திருத்த மசோதா அடுத்த நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
