
ஷா ஆலம் மாரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த விரிவுரையாளர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்த விரிவுரையாளரின் மீதான குற்றச்சாட்டைக் கடுமையாகக் கருதி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விசாரணைக் குழு அவர் மீது துல்லியமான விசாரணையை மேற்கொண்டு, அளித்த விசாரணை அறிக்கையை ஒட்டி, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகப் பல்கலைக்கழக உதவி வேந்தர் Roziah Mohd Janor (ரோஸியா முகமட் ஜானோர்) தெரிவித்தார்.
