
பருவகால மழை வரும் என்பதைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது என்பதால், தற்போதைய அரசாங்கத்தைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமென ஜசெக தலைமைச் செயலாளர் Anthony Loke (அந்தோணி லோக்) தெரிவித்தார்.
நாட்டை ஆட்டிப்படைக்கும் பல்வேறு பிரச்சினைளுக்குச் சிறந்த தீர்வைக் காணும் புதிய அரசாங்கம் வேண்டுமென்றாலும் தேர்தலை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தேசிய மீட்பு நடவடிக்கை மன்றம் தீர்வுகளைப் பரிந்துரைத்திருந்தாலும், அரசு அதனை நிறைவேற்றும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
எனவே, பொதுத்தேர்தலை நடத்தும் வரை நாம் பொறுமை காக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
