
செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5.10 மணியளவில் Tumpat, Kampong Semat Jalil (தும்பாட் கம்போங் செமாட் ஜாலிலில்) இருந்து கடத்தப்பட்ட பெண் தொழில் முனைவர், தாய்லாந்தில் மீட்கப்பட்டதாகப் போலீஸ் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா தெரிவித்தார்.
தாய்லாந்து போலீசாரின் உதவியோடு அந்தப் பெண் மீட்கப்பட்டார். அவரைக் கடத்தியதாக நம்பப்படும் 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு 1961ஆம் ஆண்டு ஆள்கடத்தல் சட்டத்தின் வழி விசாரிக்கப்படும்.
