
நாட்டில் கடும் நோய்களுக்கான நோய்த்தடுப்பு மருத்துவ நிபணர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அதனை அதிகரிக்க உடனடி நடவடிக்கை தேவை என சுகாதார அமைச்சர் Khairi Jamaludin (கைரி ஜமாலுடின்) தெரிவித்தார்.
தற்போது மலேசியாவில் குறைந்தது 150,000 கடும் நோய்க்கு ஆளான நோயாளிகள் இருப்பதாகவும் அதன் அடிப்படையில், நமக்கு 218 நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்கட்டினார்.
2030ஆம் ஆண்டிற்குள் 70 நோய்த் தடுப்பு மருத்துவர்களின் தேவை இருப்பதால், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கைரி குறிப்பிட்டார்.
