
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸின் சுய சரிதைப் புத்தகம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
அப்புத்தகத்தில் நீதித் துறையின் அவலம், அரசின் ரகசியங்கள், அதிகாரத் துஷ்பிரயோகம், நிந்தனைக் குற்றச் சாட்டுகள் அடங்கியிருப்பதாக சிறப்பு ஆய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்காத்தான் ஆட்சியின்போது, 20 மாத காலம் சட்டத் துறைத் தலைவராக இருந்த டோமி தோமஸ் தமது புத்தகத்தில் பல தரப்பினரைச் சிறுமைப்படுத்தி, நிந்தித்ததாக அவர் மீது முன்னாள் சட்டத் துறைத் தலைவர் Afandi Ali (அபாண்டி அலி), முன்னாள் வழக்காடு மன்றத் தலைவர் Hanafiah Zakaria (ஹனாஃபியா ஸக்காரியா) ஆகியோர் புகார் தெரிவித்திருந்தனர்
