
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட கைகலப்பு ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் மரணமடைந்து இருவர் காயமடைந்ததாக வங்சா மாஜு போலீஸ் தலைவர் Ashari Abdul Samah (அஷாரி அப்துல் சாமா) தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 6 ஆண்களும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மரணமடைந்தவரும் அவரது நண்பர்களும் ஆப்பிரிக்க நாட்டவர்களுடன் சண்டையிட்டதாக நம்பப்படுகிறது.
மரணமடைந்ததவரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு, சிகிச்சை பெறும்போது மரணமடைந்துள்ளார். கைது செய்யப்பட்ட 8 பேர் வங்சா மாஜு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
