
ஒப்பந்த மருத்துவர்கள் 1,000 பேர் நிரந்தரப் பதவியில் அமர்த்தப்பட்ட போதிலும், அவர்கள் இதற்கு முன்னர் இருந்ததற்கு மாறாக கிரேட் யுடி41இல் அமர்த்தப்பட்டு குறைவான சம்பளத்திலும் ஆண்டு சம்பள உயர்வு வெறும் ரிம. 225 மட்டுமே தரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்,
யுடி43 கிரேடில் உள்ள மருத்துவர்களைப் போலவே தாங்களும் பணியாற்றுவதோடு அவர்களைப் போலவே பொறுப்புகளைச் சுமந்தாலும் எங்களுக்கு பாகுபாடு ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாட்டில் 30,000 ஒப்பந்த மருத்துவர்கள் இருப்பதாகவும் அரசு 4,000 பேருக்கு மட்டுமே நிரந்தரப் பதவியை வழங்க இணக்கம் கண்டு, அக்டோபர் 17ஆம் தேதி இன்னும் 3,000 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்த அறிவித்துள்ளது.,
