
பக்காத்தான் கூட்டணியில் மூடா கட்சியைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என பிகேஆர் மாநில இளைஞர் பிரிவினர் எதிர்ப்பு மகஜர் ஒன்றினை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
மூடா இணைவதினால் பக்காத்தானுக்கு எந்தப் பயனும், பலனும் இல்லை என்றும் தொகுதிப் பங்கீட்டில் அது பெரும் பிரச்சினையை உருவாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது,
அக்கட்சி நகர்புற, பகுதி நகர்ப்புற தொகுதிகளை மட்டுமே குறி வைத்து இயங்குவதால், பிகேஆர் உறுப்புக் கட்சிகள் அதனால் பாதிப்படையும் என்றும் எச்சரித்தனர்.
மேலும், ஜொகூர் தேர்தலில் மூடா, பக்காத்தானை நடந்திய விதம் அநாகரிகம் என்றும் அதனை எக்காலத்திலும் மறக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்,
