
எதிர்காலத்தில் நாட்டில் 2.1 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் இருக்கும்போது அவர்களால் உள்நாட்டினரின்
வேலை வாய்ப்பு எவ்வகையிலும் பாதிக்கப்படாது என்று மனிதவள அமைச்சர் எம். சரவணன் குறிப்பிட்டார்.
முழுமையான, ஆழமான ஆய்வு செய்த பின்னரே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தற்போது நாட்டில் 2,127,722 அந்நியத் தொழிலாளர்கள் இருப்பதாகவும் அது தொழில்துறையின் தேவைக்கு ஏற்ப 2.1 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னர், நாட்டில் 1.8 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
