
இந்தோனேசிய தூதரகத்தின் அலுவலக அதிகாரியின் ஒத்துழைப்போடு சபா குடிநுழைவு திட்டத்தின் கீழ் 342 இந்தோனேசியர்கள் புதன்கிழமையும் , நேற்றும் அவர்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடல் மார்க்கமாக அந்த சட்டவிரோத குடியேறிகள் Tawau துறைமுகத்திலிருந்து இந்தோனேசியாவின் Nunukan துறைமுகத்திற்கு திரும்பினர் என சபா குடிநுழைவு இயக்குனர் டத்தோ SH Sitti Saleha Habib yussof தெரிவித்தார். புதன்கிழமையன்று 135 பேரும் நேற்று மேலும் 207 பேரும் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
