
மூன்று ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்த ஹாலாந்து மாடல் அழகி Ivana Smit தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. தமக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் அல்லது சிலரினால் அந்த மாடல் அழகிக்கு மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணை முழுமையடைவதற்கு முன் பல்வேறு விவகாரங்கள் குறித்த போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என கூட்டரசு மூத்த வழக்கறிஞர் Norfauzani Nordin விசாரணை அதிகாரி Faizal Abdullahவை கேட்டுக்கொண்டார். எனினும் விசாரணையின் நடப்பு விவரங்கள் குறித்து மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்திற்கு இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லையன அவர்களது குடும்ப வழக்கறிஞர் S.N Nair நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
