
மக்களவையில் கலந்து கொள்ள அனுமதிக்காத சபாநாயகருக்கு எதிராக நஜிப் ரசாக் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி Ahmad Kamal Md Shahid (அமாட் கமால் மாட் ஷாஹிட்) தள்ளுபடி செய்தார்.
அக்டோபர் 10ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஒட்டி நஜிப் ரசாக் எம்பியாக பதவி வகிக்கவில்லை என்பதால் அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அவர் இயல்பாக எம்பி பதவியில் இருக்க முடியாத நிலையில், அவரின் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
