
மருத்துவ நோக்கத்துக்காக ஒரு காரில் ஓட்டுனர் உட்பட மூவர் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
ஆபத்து அவசர வேலைகளுக்கும் மருத்துவ நோக்கத்திற்காக ஒரு காரில் மூவர் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மருத்துவரின் கடிதம் கொண்ட முன்பதிவு மற்றும் மைசெஜாத்ரா செயலி மூலம் உறுதி பட்ட பதிவை அவர்கள் கொண்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாகனங்கள் பழுதுபார்க்கும் பட்டறை மற்றும் டயர் கடைகள் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள sop விதிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப் படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
