
நாட்டில் இன்று முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை தேசிய பதிவு இலாகா மற்றும் வழிபாட்டுத் தலங்களில் நடைபெற்ற திருமண பதிவு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காலகட்டத்தில் தேசிய பதிவு இலாகா முகப்பிடசேவைகள் அனைத்தும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பதிவு இலாகாவில் ஏற்கனவே சந்திப்புக்கு தேதி வழங்கப்பட்டவர்கள் தேதியை மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
