
நோய்தொற்று அதிகம் உள்ள அபாயப் பகுதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அடாம் பாபா கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் இதுவரை சிறுவர்கள் உட்படுத்திய 82, 341 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே sop விதிமுறைகளை மீறி அபாயப் பகுதிகளுக்கு தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மீது விசாரணை மேற்கொள்ள முடியுமென அவர் எச்சரித்தார்.
