
பேரா மாநிலத்தில் பசுக்கள் மற்றும் எருமைகள் மீது ஒரு வித அடர்த்தியான தோல் நோய் ஏற்பட்டிருப்பதை கால்நடை இலாகா கண்டு பிடித்துள்ளது.
மாநில தோட்டம்,விவசாயம் மற்றும் உணவுத் தொழில் ஆட்சிகுழுத் தலைவர் ரஸ்மான் சக்கரியா இதை உறுதி படுத்தினார்.
இங்கு சிம்பாங் பூலாயில்,மாடு வளர்க்கும் பண்ணை ஒன்றில் இந்நோய் கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொன்னார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்திலுள்ள அனைத்து மாட்டுப் பண்ணைகள் மீது கால்நடை இலாகா சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறிய அவர்,இந்நோய் மனிதர்களுக்கு தொற்றாது என கால்நடை இலாகா உறுதிப்படுத்தியிருப்பதால்,பொதுமக்கள் எந்தவொரு அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றார்.
