
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ், தமது சுய சரிதைக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் பணிக்குழுவின் அறிக்கை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டுமென வழக்கைத் தாக்கல் செய்திருதந்தார்.
அந்த அறிக்கையானது தமது பெயருக்குக் களங்கத்தை உருவாக்கியிருப்பதாகவும், அது சட்ட விரோதமானது, அரசமைப்பு விதிக்குப் புறப்பானது என்றும் கூறி, அந்த அறிக்கையைத் தடைசெய்வதோடு, தமக்கு இழப்பிடு வழங்க வேண்டுமென்று கோரிக்கையை முன் வைத்திருந்தார்.
டோமி தோமஸின் வழக்கை ரத்து செய்யக் கோரியிருக்கும் அரசு, அவரின் சுயசரிதை புத்தகத்தில் அரசின் ரகசியங்கள் வெளியிட்டிருப்பதாகவும் நீதித் துறையின் மீது களங்கம் ஏற்படுத்தியிருப்பதாகவும், அதிகாரத் துஷ்பிரயோகம், தொழில் ரீதியான கவனயீனம், அரசின் மீது நிந்தனையான குற்றச் சாட்டுகள் இருப்பதால் டோமியின் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.



