
மதுபானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த காலக்கட்டத்தில் செயல்பட அனுமதி இல்லை என்று தற்காப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
பொது முடக்கம் காலகட்டத்தில் உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மதுபானங்கள் அத்தியாவசியப் பொருட்கள் பிரிவில் இடம்பெறவில்லை. ஆகவே, நாடு முழுவதிலும் உள்ள மதுபானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உடனடியாக மூட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
