
கடந்த மாதம் 180 ரோஹிங்யா அகதிகளை ஏற்றிக் கொண்டு மலாக்கா நீரிணையில் அடித்துச் செல்லப்பட்ட படகில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என ஐநா அகதிகளுக்கான நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் அந்த அகதிகளை ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மியன்மார் அரசு ரோஹிங்யா அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற அராஜக நடவடிக்கைகளுக்குப் பயந்து ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு தென் கிழக்காசிய நாடுகளுக்குத் தஞ்சம் புக படையெடுத்து வருகின்றனர்.
இதற்கு அனைத்துலக சமூகம் நல்ல முடிவை எடுக்க வேண்டுமென மேற்கண்ட அமைப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளது.



