
5க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டிருக்கும் சிறு, நடுத்தர தொழில் துறையினருக்கான குறைந்தபட்ச சம்பளத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) அதிருப்தி தெரிவித்துள்ளது.
1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத் திட்டம் அடுத்தாண்டு ஜூலை 1ஆம் தேதி வரை அரசு 6 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்தச் சம்பளத் திட்டத்தினால் பாதிக்கப்படும் சிறு தொழிற்சாலைகளுக்கு அரசு நிதியுதவியைத் தர முயற்சி செய்ய வேண்டுமென்றும் எம்டியுசி கேட்டுக் கொண்டது.
பெரிய நிறுவனங்களை வஞ்சிக்கும் அமைச்சு நிறு நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் சலுகை காட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என எம்டியுசியின் தலைவர் Effendy Abdul Ghani (எஃபெண்டி அப்துல் கனி) தெரிவித்தார்.



