
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்ததற்கு பேரரசரும் கல்விமான்களுமே காரணம் என பாஸ் கட்சி தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார்.
15ஆவது பொதுத்தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்றிருக்கும் பாஸ் கட்சி இணைந்திருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை ஒதுக்கித் தள்ளி, அன்வார் இப்ராஹின் கீழ் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது ஜனநாயகப் படுகொலை என அவர் வர்ணித்தார்.
நாட்டில் இஸ்லாத்தை முதன்மையாகக் கொண்ட ஆட்சியை அமைக்க முடியாததற்கு திட்டமிட்ட சதியே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாஸ் கட்சிக்கு இளைஞர்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாகவும் ஆனால், பக்காத்தானுக்கும் தேசிய முன்னணிக்கும் மலாய்க்காரர் அல்லாதோரும் மூத்த குடிமக்களும் ஆதரவு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.



