
🔊To listen to this news in Tamil, Please select the text.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எஸ் ஆர்சி நிதி முறைகேட்டு வழக்கில் விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை, 21 கோடி ரிங்கிட் அபராதத்தை எதிர்த்து அவர் தொடுத்துள்ள சீராய்வு மனுவை கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
விசாரணை ஜனவரி 19ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் அதற்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் அல்லது புதிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு மீண்டும் அவ்வழக்கை விசாரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.



