
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவின் நிலைத்தன்மையை நிலைநிறுத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைவரானால் அதனை தாம் ஆதரிக்கப் போவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
கட்சியின் தேர்தலில் தாம் ஓர் அணியாகப் போட்டியிடப் போவதாக குறிப்பிட்ட அவர், தாம் கட்சியில் தலைவராகப் பதவியேற்றால், அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக உறுதி கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கதவு வழியாக தாம் கவிழ்க்க எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



