
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனலை விமர்சித்து வந்தால், 15ஆவது பொதுத்தேர்தலில் உருவான ‘Green wave’ (பச்சை அலை) அடுத்த தேர்தலில் பேரலையாக உருவாகி பக்காத்தானை துவம்சம் செய்துவிடும் என கெடா மந்திரி பெசார் Sanusi Md Nor (சனுசி மாட் நோர்) எச்சரித்துள்ளார்.
பாஸ் கட்சி ஊழல் அற்ற அரசை நடத்தி வருவதால்தான், கெடாவில் பக்காத்தான் முற்றாக ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாம் முழுமையான துல்லியமானவர் என ரபிஸி மார்தட்டக் கூடாதென்றும் பாஸ் கட்சி சாதாரண கட்சியாக இருக்கலாம் ஆனால், அது பக்காத்தானைப் போன்று பெரிய தனவந்தர்களால் ஆதரிக்கப்படாத கட்சி என சனுசி குத்தலாகக் கேலி பேசினார்.



