
🔊To listen to this news in Tamil, Please select the text.
தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிக்க தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் சீக்கியர் ஒருவருக்கு இடமளிக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய சார்ச்சையாகியுள்ளது.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் இந்த விவகாரத்தில் வாய் மூடி மெளனம் காப்பது ஏன் என்ற கண்டனமும் பரவலாகக் கேட்கிறது.
மேலும், சிவகுமார் சீனர் ஒருவரை தமது பத்திரிகைச் செயலாளராக நியமித்திருப்பதுவும் பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது.
ஆக, தமிழ்க்கல்வியைப் பிரதிநிதித்து ஒரு சீக்கியரும் இந்திய அமைச்சருக்கு சீன பத்திரிகைச் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளது என்பது தமிழர்களை உதாசீனப்படுத்தும் செயலென்றும் விமர்சிக்கப் படுகிறது.



