
🔊To listen to this news in Tamil, Please select the text.
சபா, சரவாக்கை மலேசியாவின் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு முன்னர் அது பற்றி ஆட்சியாளர்களிடம் கலந்து பேசப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் சபாவும் சரவாக்கும் இணையும்போது அவை மலாயா, சபா, சரவாக் என்ற சம அந்தஸ்து கொண்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனையொட்டு அவ்விரு மாநிலங்களை மலேசியாவின் பிரதேசங்களாக பிரகடனப்படுத்துவதற்கு அரசமைப்பு விதியை முதலில் திருத்த வேண்டும்.
அதனைச் செய்ய ஆட்சியாளர்களின் சம்மதத்தை முதலில் கோரிய பின்னர், அமைச்சரவையில் விவாதித்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்வார் தெரிவித்தார்.
