
🔊To listen to this news in Tamil, Please select the text.
வாக்கு சேகரிக்கும் நோக்கில் தேர்தல் காலங்களில் வழங்கப்படும் நன்கொடைகள் யாவும் லஞ்சமே என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதனை தர்மமென கூறுவது ஊழலை மறைக்கும் செயலென அவர் குற்றம் சாட்டினார். இம்மாதிரியான செயல் சமூகத்தில் லஞ்சம் கொடுப்பதை ஊக்குவித்து நாட்டுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
வசதி குறைந்தோருக்கு ஈகை செய்வதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால், தேர்தலில் வாக்கு சேகரிக்கும் நோக்கத்தோடு கொடுக்கப்படும் எதுவும் லஜ்சமே என அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு முதலமைச்சர் செள கோன் இயோவ் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.



